Wednesday, July 22

அவசரநிலை கர்ப்பத்தடை மாத்திரைகள்

"எமர்ஜென்சி காண்டிராசெப்டிவ் பில்ஸ்" எனப்படும் "அவசரநிலை கர்ப்பத்தடை மாத்திரைகள்" இப்போது இந்தியாவிலும் பரவலாக கிடைக்கின்றன .
இவற்றை பற்றி மேலும் அறிந்து கொள்வோம் .


எதற்கு உபயோகிக்கலாம் ?
1.கர்ப்பத்தடை முறைகள் எதுவும் பயன்படுத்தாமல் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் போது கர்ப்பமாகாமல் தடுக்கவும்
2 .பாலியல் வல்லுறவை தொடர்ந்து கர்ப்பமாகாமல் தடுக்கவும்
3.பயன்படுத்திய கர்ப்பத்தடை முறைகள் சரியாக கடைபிடிக்க முடியாமல் போகும் போதும் ...


எப்போது எடுக்க வேண்டும்?
பாதுகாப்பற்ற உடலுறவை தொடர்ந்து எவ்வளவு விரைவில் முடியுமோ அத்தனை விரைவில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் .
அதிகபட்சமாக 72 மணி நேரத்திற்குள் இவற்றை உட்கொள்ள வேண்டும் .
ஐந்து நாட்கள் வரை இவை பாதுகாக்கக் கூடும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .ஆனால் நேரம் கூடக் கூட மருந்துகளின் வீரியம் நிச்சயம் குறையும் .


எப்படி கர்ப்பம் தடுக்கப்படுகிறது ?
கருமுட்டை உண்டாகாமல் தடுப்பதன் மூலமும்
கரு கர்ப்பபையில் ஊன்றாமல் தடுப்பதன் மூலமும்


எச்சரிக்கைகள்
1.மாத்திரையை உட்கொண்ட பின் தலைசுற்றல்,வாந்தி போன்றவை ஏற்படலாம்
2.மாத்திரைகள் எடுத்த மாதத்தில் மாதவிடாய் ஒரு வாரத்திற்கு மேற்பட்டு தள்ளிப் போனால்,ரத்தப் போக்கின் அளவு வெகு குறைவாக இருந்தால் கர்ப்பமாக இருக்க வாய்ப்புண்டு .
3.வயிற்று வலி ,லேசான ரத்தப் போக்கு இருந்தால் கருக் குழாயிலேயே கர்ப்பம் உண்டாகி உயிருக்கு ஆபத்தாகும் வாய்ப்பு இருக்கிறது .
4.இது எச்.ஐ.வி போன்ற நோய்களில் இருந்து பாதுகாப்பு தராது.
5.இது மாதமாத்திரைகள் ,ஆணுறைகள் போன்ற மற்ற கர்ப்பத்தடை முறைகளுக்கு மாற்று இல்லை .

2 comments:

Several tips said...

மிகவும் அருமை

பூங்குழலி said...

மிக்க நன்றி

Post a Comment