Wednesday, June 3

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பு ஊசி

எப்படி கொடுக்க வேண்டும் :

மூன்று ஊசிகளாக ...
முதல் ஊசி
அடுத்தது -இரண்டு மாதங்களுக்கு பின்
கடைசி -முதல் ஊசியிலிருந்து ஆறாவது மாதத்தில்

எவருக்கு கொடுக்கலாம் :

தற்போதைய பரிந்துரைகள் படி இதை9 முதல் 26 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு கொடுக்கலாம் .


இந்த வயதை தாண்டிய பெண்களுக்கு முன்பே எச்.பி.வி பதிப்பு இருக்கக்கூடும் என்பதால் இவர்களுக்கு தற்போது இந்த தடுப்பூசி பரிந்துரைக்கப்படுவதில்லை .இது சம்பந்தமாக இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளில் நிச்சயம் அவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று முடிவானால் இவர்களுக்கும் கொடுக்க முடிவாகலாம் .


அதே போல் ஆண்களுக்கு இதை கொடுப்பது பற்றியும் ஆலோசனை செய்யப்படுகிறது .(இங்கிலாந்தில் தற்போது ஆண்களுக்கும் கொடுக்கப்படுகிறது )


எச்சரிக்கைகள்:

1.ஈஸ்ட் க்கு ஒவ்வாமை உள்ளவர்கள் மற்றும் முதல் ஊசி போடப்பட்ட போதுஒவ்வாமை ஏற்பட்டவர்கள் இந்த ஊசியை போட்டுக்கொள்ள கூடாது .

2.இந்த ஊசி முதலில் சொல்லப்பட்ட நான்கு வகை எச்.பி.வி க்கு மட்டுமே எதிர்ப்பு சக்தி அளிக்கிறது .வேறு காரணங்களால் (வேறு எச்.பி.வி வகைகள் போல ) ஏற்படும் கருப்பைவாய் புற்றுநோய்க்கு எதிராக இது பாதுகாப்பளிக்காது .

3.கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக இதை போட்டுக் கொள்ளக் கூடாது .

4.ஏற்கெனவே இந்த நான்கு வகை எச்.பி.வி பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த ஊசி முழு பலனளிக்காது .

5.இந்த ஊசி போட்டுகொண்டவர்களும் வழக்கம் போலவே கருப்பை புற்றுநோய்க்கு எதிரான சோதனைகளை செய்து கொள்ள வேண்டும்

6.கருப்பை புற்றுநோய்க்கு காரணமான எச்.பி.வி கிருமிகளிடமிருந்து பாதுகாக்க மட்டுமே செய்யும் இந்த ஊசி .இது கருப்பை புற்றுநோய்க்கோ ,இந்த எச்.பி.வி யினால் வரும் வேறு நோய்க்களுக்கோ சிகிச்சை முறை இல்லை .


தற்போது இந்த தடுப்பூசி கருப்பை புற்று நோய்க்கான சிகிச்சையில் ஒரு மாபெரும் முன்னேற்றமாக போற்றப்பட்டு வருகிறது .இந்தியாவிலும் கிடைக்கிறது .இதை பற்றி மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று வருமுன் காத்துக் கொள்வோம் .

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பு ஊசி



"இந்தியாவில் ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கு ஒரு பெண் கருப்பை வாய் புற்று நோய் காரணமாக மரணமடைகிறாள் "


வளர்ச்சியடைந்த பல நாடுகளில் இன்று பெண்களை பாதிக்கும் புற்றுநோயில் முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய் . ஆனால் இந்தியாவில் மட்டும் கருப்பை வாய் புற்றுநோயே அதிகமாக இருக்கிறது .


இந்த வகை புற்றுநோய் அதிகம் எச்.பி.வி(HPV) எனப்படும் வைரஸ் கிருமியால் வருகிறது .இது உடலுறவில் மூலமே பரவுகிறது .இந்த கிருமியில் நான்கு வகைகள் 6,11,16,18 மட்டுமே 70% நோய்க்கு காரணமாக இருக்கின்றன .இது தவிர பிறப்புறுப்பில் வரும் மருக்களுக்கு (genital warts) 90% வரை இவையே காரணமாக இருக்கின்றன .


கருப்பைவாய் புற்றுநோய் 35 முதல் 55 வயதிற்கு உட்பட்ட பெண்களில் அதிகம் காணப்படுகிறது .


இந்த நோய்க்கு எதிரான ஆராய்ச்சியின் விளைவாக இப்போது தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கார்டாசில் (Gardasil )என்ற பெயரில் .இந்த ஊசி மேற்கூறிய நான்கு வகை எச்.பி.வி கிருமிகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி அளிக்கிறது .


2006ஆம் வருடம், ஜூன் மாதம் அமெரிக்க ஃப்.டி.ஏ (FDA )
மெர்க்கின் விண்ணப்பத்தை ஏற்று இதை விற்பனைக்கு அனுமதித்தது .