Wednesday, June 3

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பு ஊசி



"இந்தியாவில் ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கு ஒரு பெண் கருப்பை வாய் புற்று நோய் காரணமாக மரணமடைகிறாள் "


வளர்ச்சியடைந்த பல நாடுகளில் இன்று பெண்களை பாதிக்கும் புற்றுநோயில் முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய் . ஆனால் இந்தியாவில் மட்டும் கருப்பை வாய் புற்றுநோயே அதிகமாக இருக்கிறது .


இந்த வகை புற்றுநோய் அதிகம் எச்.பி.வி(HPV) எனப்படும் வைரஸ் கிருமியால் வருகிறது .இது உடலுறவில் மூலமே பரவுகிறது .இந்த கிருமியில் நான்கு வகைகள் 6,11,16,18 மட்டுமே 70% நோய்க்கு காரணமாக இருக்கின்றன .இது தவிர பிறப்புறுப்பில் வரும் மருக்களுக்கு (genital warts) 90% வரை இவையே காரணமாக இருக்கின்றன .


கருப்பைவாய் புற்றுநோய் 35 முதல் 55 வயதிற்கு உட்பட்ட பெண்களில் அதிகம் காணப்படுகிறது .


இந்த நோய்க்கு எதிரான ஆராய்ச்சியின் விளைவாக இப்போது தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கார்டாசில் (Gardasil )என்ற பெயரில் .இந்த ஊசி மேற்கூறிய நான்கு வகை எச்.பி.வி கிருமிகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி அளிக்கிறது .


2006ஆம் வருடம், ஜூன் மாதம் அமெரிக்க ஃப்.டி.ஏ (FDA )
மெர்க்கின் விண்ணப்பத்தை ஏற்று இதை விற்பனைக்கு அனுமதித்தது .

No comments:

Post a Comment